கிளியோபாட்ராவின் வாழ்க்கை இன்றும் விடைக்கிடைக்காத புதிராக@வ உள்ளது.
அவள் வாழ்க்கை பயணத்தை இங்க பார்க்கலாம்....
கி.மு. 6930 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்தான் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உண்டு.
அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் ஆராய்ந்து கொண்டுதான் இருகின்றன.
எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமிகள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12-ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை
சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம்.
11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.
14 வயதாகும்போதே தந்தை யுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13-ம் தாலமியை திருமணம் செய்துகொண்டாள்.எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.
இந்நிலையில் கிளி@யாபாட்ராவின் கணவனும், தம்பியுமான 13-ம் தாலமி மர்மமாக கொல்லப்பட்டார் கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார்.
அடுத்து ரோம பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.
இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது.
கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தான். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார்.
கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.
சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோபாட்ரா எகிப்து பாலைவனத்தில் திரியும் கொடிய விஷம்கொண்ட நல்லபாம்பை கடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 39 வயதில் அவளது சகாப்தம் முடிவுக்கு வந்தது.
கிளியோபாட்ரா உண்மையில் கிரேக்க பெண்மணியல்ல என்றும் அவர் ஓர் அபிரிக்க தாய் என்றும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துருக்கியில் கண்டெடுக்கப்பட்ட பெண்மணி ஒருவரின் சடலம் கிளியோபாட்ராவின் சகோதரியுடையது என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பெண்மணி ஆபிரிக்க பெண்மணியாக இருப்பதால் கிளியோபாட்ராவும் ஓர் ஆபிரிக்க பெண்மணியே என்று ஆஸ்திரிய ஆய்வாளர் போராசிரியர் கில்கி துவார் தெரிவித்துள்ளார். கிளியோபாட்ரா, யூலியஸ்சீசர், மார்க்குஸ் அன்ரனி ஆகிய மூன்று புகழ் மிக்க பாத்திரங்களும் உண்மையானவர்களா கற்பனையில் உருவாக்கப்பட்டவர்களா என்பது தொடர் சிக்கலாகவே இருந்து வருவதாக அகழ்வாராய்ச்சியாளர் நீல்ஸ் ஒலிவர் தெரிவிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். “பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை. சற்று நேர மரண போராட்டம் உண்டு.
அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள் என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர்.
அவள் வாழ்க்கை பயணத்தை இங்க பார்க்கலாம்....
கி.மு. 6930 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்தான் குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உண்டு.
அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீசர், மார்க் ஆன்டனி போன்ற மாவீரர்களின் காதல் மனைவியாகவும் இருந்தாள். கிரேக்கம், ரோம், எகிப்து என பல நாடுகளின் வரலாறே அவளால் மாறியது. போராட்டங்களும், மர்மங்களும் நிரம்பிய அவளது வரலாற்றை இன்றும் பல மேற்கத்திய பல்கலைக் கழகங்கள் ஆராய்ந்து கொண்டுதான் இருகின்றன.
எகிப்து பேரரசியாக இருந்தாலும் அவள் கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவளியில் வந்தவள். தாலமிகள் தங்களை கிரேக்கர்கள் எனக்கூறுவதில் பெருமை கொண்டிருந்தனர். ஆனால் 12-ம் தாலமியின் மகளாக பிறந்த கிளியோபாட்ரா தன்னை எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி எனக் கூறிக்கொண்டாள். தனது முன்னோர்களை போல் அல்லாமல் மிகுந்த சிரத்தை எடுத்து எகிப்து மொழியை கற்றுக்கொண்டாள். இதனால் எகிப்து மக்கள் அவளை ஒரு தேவதையாகவே கொண்டாடினர்.
வசீகரம், இளமை, புத்திக்கூர்மை, தேசப்பற்று, நினைத்தை
சாதிக்கும் உறுதி இவைதான் கிளியோபாட்ராவின் வெற்றி ரகசியம்.
11 மொழிகள் சரளமாக பேசுவாள். பேச்சாற்றலும் நிறைந்தவள். அவளது பேச்சுக்கு யாரும் மறு பேச்சு பேசியதில்லை.
14 வயதாகும்போதே தந்தை யுடன் சேர்ந்து ஆட்சியை பகிர்ந்துகொண்டாள். தந்தை இறந்த பின் 18-வது வயதில் அரசியானாள். எகிப்து அரச வழக்கப்படி அரசி மட்டும் தனியாக ஆட்சி நடத்தமுடியாது. இதனால் அந்நாட்டு வழக்கப்படி தனது தம்பி 13-ம் தாலமியை திருமணம் செய்துகொண்டாள்.எகிப்தில் பெரும் படை கிடையாது. நைல் நதி தீரம் என்பதால் செல்வத்துக்கு பஞ்சமில்லை. இதனால் அண்டைநாடுகள் எகிப்து மேல் ஒரு கண்ணாகவே இருந்தன.
எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க கிளியோபாட்ரா எடுத்த முடிவு யாரும் எதிர்பாராதது. அப்போது வலிமையுடன் இருந்த ரோமப்பேரரசர் ஜூலியஸ் சீசரை காதலிக்க முடிவு செய்தாள். முதல் சந்திப்பிலேயே ஜூலியஸ் சீசரை தன் காதல் வலையில் வீழ்த்தினாள். அப்போது கிளியோபாட்ராவுக்கு 21 வயது, சீசருக்கு 54. விரைவில் சீசரின் மகனுக்கு கிளியோபாட்ரா தாயானாள்.
இந்நிலையில் கிளி@யாபாட்ராவின் கணவனும், தம்பியுமான 13-ம் தாலமி மர்மமாக கொல்லப்பட்டார் கிளியோபாட்ராதான் கொன்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், காதலி கிளியோபாட்ராவை ரோமுக்கு அழைத்து வந்தார் சீசர். இது சீசரின் உயிருக்கே ஆபத்தானது. அதிகார போராட்டத்தில் சீசர் கொல்லப்பட்டார்.
அடுத்து ரோம பேரரசின் அதிகாரத்தை கைப்பற்றிய தளபதி மார்க் ஆன்டனியை திருமணம் செய்தாள். அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த காலத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதரனை கிளியோபாட்ரா கொன்று எகிப்து அரசுக்கு தன்னைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாமல் செய்துகொண்டாள்.
இந்நிலையில் கிளியோபாட்ராவுக்கு சீசரின் வாரிசான அகஸ்டஸ் சீசரால் ஆபத்து வந்தது.
கடும் கோபத்தில் இருந்த அகஸ்டஸ் சீசர் எகிப்து மீது போர் தொடுத்தான். இதில் பரிதாபமாக தோற்ற ஆன்டனி தற்கொலை செய்து கொண்டார்.
கிளியோபாட்ராவும் அவளது குழந்தைகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.

கிளியோபாட்ரா உண்மையில் கிரேக்க பெண்மணியல்ல என்றும் அவர் ஓர் அபிரிக்க தாய் என்றும் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துருக்கியில் கண்டெடுக்கப்பட்ட பெண்மணி ஒருவரின் சடலம் கிளியோபாட்ராவின் சகோதரியுடையது என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பெண்மணி ஆபிரிக்க பெண்மணியாக இருப்பதால் கிளியோபாட்ராவும் ஓர் ஆபிரிக்க பெண்மணியே என்று ஆஸ்திரிய ஆய்வாளர் போராசிரியர் கில்கி துவார் தெரிவித்துள்ளார். கிளியோபாட்ரா, யூலியஸ்சீசர், மார்க்குஸ் அன்ரனி ஆகிய மூன்று புகழ் மிக்க பாத்திரங்களும் உண்மையானவர்களா கற்பனையில் உருவாக்கப்பட்டவர்களா என்பது தொடர் சிக்கலாகவே இருந்து வருவதாக அகழ்வாராய்ச்சியாளர் நீல்ஸ் ஒலிவர் தெரிவிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வாழ்நாள் முழுவதும் தன் அழகிய தோற்றம் மீது அக்கறை செலுத்தி வந்த கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்திருக்கமாட்டாள் என ஜெர்மன் வரலாற்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் செபர் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். “பாம்பு கடித்தால் அடுத்த நொடி மரணம் நிகழ்வதில்லை. சற்று நேர மரண போராட்டம் உண்டு.
அவள் வாழ்ந்த காலத்தில் எகிப்தில் மிகவும் பயங்கரமான விஷம் ஒன்று வழக்கத்தில் இருந்தது. ஓபியம் மற்றும் விஷத்தாவரங்களின் கூட்டால் செய்யப்படும் கஷாயம் அது. கிளியோபாட்ரா அதைத்தான் அருந்தினாள் என்கிறார் செபர். எகிப்து பழங்கால ஏடுகளில் இருந்து இதற்கான ஆதாரங்களையும் காட்டுகிறார் செபர்.