அம்மா....
மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..
குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...
எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..
ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..
என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..
என்னை அல்ல...
மழையை..
**********************
நீ வேண்டும்..!
நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..
****************
அவள் பார்வையில்
மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..
ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..
****************
நினைவுகள்
உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...
**************
மீண்டு(ம்) வருவாய்...!
எப்போதும் என்னுடனே
இருப்பேன்..
நீ சொன்ன நினைவு
என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..
****************
காதலின் அழுத்தம்
உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....
என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!
*********************
பொய்...
நான் நினைக்கும்போதெல்லாம்
விக்கல் வருமென்றால்,
விக்கல் வருமென்றால்,
அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே.
.
*********************
தமிழ் ஜி.எம்.எஸ். தளத்திற்காக....
ஸ்வீடனிலிருந்து ஜோஸ்....
.
*********************
தமிழ் ஜி.எம்.எஸ். தளத்திற்காக....