ம்மா....


மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்..

குடை கொண்டு போக
வேண்டியது தானே - அண்ணன்...

எங்கேயாவது ஒதுங்கி நிக்க
வேண்டியது தானே - அக்கா..

ஜலதோஷம் பிடிச்சி செலவு
வைக்க போற - அப்பா..

என் தலையை முந்தானையால்
துவட்டியவாறே திட்டினாள் - அம்மா..

என்னை அல்ல...
மழையை..

**********************

நீ வேண்டும்..!


நீ என்னுடன் எப்போதும் பேச வேண்டும்
என்று நான் சொல்லவில்லை..
என்றாவது நான் பேசும் போது
யார் நீ
என்று கேட்காமல் இருந்தால் சரி..









****************



 அவள் பார்வையில் 


மின்னலே..
உன்னை ஒருமுறை பார்த்தால்
கண்களை எரித்துவிடுகிறாய்..

ஒருமுறை அவள் கண்களை
நேருக்கு நேர் பார் நீயே
எரிந்து விடுவாய்..






****************
நினைவுகள்


உன்னை
அதிகமாய் நினைப்பதாலோ
என்னவோ..
என்னை
நினைப்பதை
மறந்து விட்டேன்...






**************

மீண்டு(ம்) வருவாய்...!


எப்போதும் என்னுடனே
இருப்பேன்..

நீ சொன்ன நினைவு

என்னை வாட்டிக்கொண்டு
இருக்கிறது!!
எப்போது வருவாய்
என்னிடம்..

****************

காதலின் அழுத்தம்

உன் கரம் கோர்த்து
விரல்களிடையே விரல் நுழைத்து
நடக்கையில் தான் தெரிந்தது....

என் மேல் நீ
வைத்திருந்த காதலின்
அளவு என்னவென்று!!







*********************

பொய்...

நான் நினைக்கும்போதெல்லாம்

விக்கல் வருமென்றால்,

அவள் எப்போதோ இறந்திருப்பாள் விக்கியே.
.
*********************

தமிழ் ஜி.எம்.எஸ். தளத்திற்காக....

ஸ்வீடனிலிருந்து   ஜோஸ்....


linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...