வீரர்களின் உயிர் காப்பது தலைக் கவசம் எனில்,
பெண்களின் மானம் காப்பது ஹிஜாப் (பர்தா)எனும் கவசம்
இன்றைய காலத்தில் பெண்கள் தற்காப்புக் கலை என்ற பெயரில் கற்று வருகிறார்கள். ஆனால் பெண்களுக்கு முதல் முக்கிய தற்காப்பு எது தெரியுமா? அது தான் ஹிஜாப் (பர்தா).
பர்தா என்பதன் அரபிச் சொல் தான் ஹிஜாப்பெண்கள் தங்களின் அங்கங்களை மறைத்துக் கொள்ளும் வகையான ஆடையைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

இஸ்லாம் பெண்களை உயர்வாகவும், கண்ணியமானவர்களாகவும் மதிக்கிறது.ஒரு பொருள் பேணிப் பாதுகாப்படும் பொழுது தான் அதன் மதிப்பு உயரும். அது சிறப்புடனும் பேசப்படும். இவ்வாறு தான் பெண்களை உயர்வாகக் கருதி ஹிஜாப் முறையைக் கையாளச் சொல்கிறது இஸ்லாம். இதைத் திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய)நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59)
தெருக்கள், கடை வீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, வங்கி போன்ற அனைத்து இடங்களிலும் ஆண்களுடன் பெண்கள் கலந்து இருப்பார்கள். பெண்களை கெட்ட எண்ணத்துடன் பார்க்கும் ஆண்கள் இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் பெண்கள் ஒழுக்கத்துடன் பயமின்றி சென்று வர ஹிஜாப் அவசியமாகின்றது.
ஹிஜாப் அணிந்த பெண் கெட்ட எண்ணம் கொண்ட ஆண்களின் பார்வைகளிலிருந்து பாதுகாப்பு பெறுகிறாள்இப்படி ஹிஜாபின் சிறப்பை அறிந்தவர்கள் இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல. (எங்கள் ஊர் தொண்டியில்மாற்று மதத்தைச் சேர்ந்தபருவடைந்த மாணவிகள் ஹிஜாபுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஹிஜாப் அணிந்து வெளியில் செல்பவர்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு, சென்ட் போன்ற நறுமணப் பொருட்களை உபயோகித்து ஹிஜாபுடன் சென்றால் ஹிஜாபின் நோக்கமே பாழாகிவிடும். ஹிஜாப் அணிபவர்கள் முகத்தையும், இரு முன் கைகளையும் தவிர வேறெந்த அலங்காரத்தையும் வெளிக்காட்டாக் கூடாது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் (அல்குர்ஆன்24:31)
மேலும் ஒழுக்கமுடன் வாழும் பெண்களுக்கு மறுமையில் அல்லாஹ் மகத்தான கூலியை வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.
முஸ்லிமான ஆண்களும்பெண்களும்நம்பிக்கை கொண்ட ஆண்களும்,பெண்களும்கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும்பெண்களும்உண்மை பேசும் ஆண்களும்பெண்களும்பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும்பெண்களும்,அடக்கமாக நடக்கும் ஆண்களும்பெண்களும்தர்மம் செய்யும் ஆண்களும்பெண்களும்,நோன்பு நோற்கும் ஆண்களும்பெண்களும்தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்பெண்களும்அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும்பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும்மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப் பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இரு பாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப்போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.
இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு இவ்வாதம் வலுவானதன்று.
ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.
ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.
பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு நிகாப்‘ தான். நீச்சலுடை அல்ல” என்கிறார் இஸ்லாத்தைத் தழுவிய முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர். சுதந்திரக்குறியீடு மட்டுமல்ல, ‘ஹிஜாப்’தான் தங்கள் மானத்துக்கும், மரியாதைக்கும் இன்னும் சொல்லப்போனால் உயிருக்கும் கூட பாதுகாப்புக்கவசம் என்று புரிந்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகறித்தே வருகிறது.

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும்அவற்றில் மிகச் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு,நூல்: முஸ்லிம் 2911)
நல்லொழுக்கமுள்ள பெண்களின் அடையாளங்களில் ஹிஜாபும் ஒன்று என்பதை எவரும் மறுக்க முடியுமா?


Thanks To ( mr)Friend

குட்டி தேவதை


நீ...
திருவோணம் பெற்றெடுத்த வெகுமானம்
திரைகடல் தாண்டும் உன் பகுமானம்


நீ..
சூரியனுக்கும் தாமரைக்கும் பிறந்தவள்
சொர்க்கத்தின் மடியினிலே வளர்ந்தவள்




நீ...
கண்ணாடி பாத்திரமாய் இருப்பதானால்
கல்லெறிய துடிப்பார்கள்- - எச்சரிக்கை!




அக்ஷய பாத்திரமாய் நீயிருந்தால்
ஆண்டவனே கைகட்டி வந்து நிற்பான்




அறிவையும் தெளிவையும் துணை கொண்டு
அகிலத்தை வென்று விடு - என் ஆசி உண்டு


பாளை. கண்ணப்பன்





இது ஒரு குட்டி தேதைக்காக
திரு. கண்ணன் அவர்களால் எழுதப்பட்டது.
1. மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.
4. இரத்த சோகையை போக்க: பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது: தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு: குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.


7. உடல் சக்தி பெற: இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.


8. வெட்டுக்காயம் குணமாக: நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக: ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.


10. உடல் அரிப்பு குணம் பெற: வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக: வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக: அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.


13. சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக: புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக: சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.


16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக: நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக: மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.


19. வாதநோய் குணமாக: குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

20. மலச்சிக்கல் சரியாக: அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக: ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.


22. நீரழிவு நோய் குணமாக: மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த: அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக: அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும். 


25. நரம்பு தளர்ச்சி நீங்க: தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க: மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக: காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.


28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக: குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய: வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.


31. மலச்சிக்கல் தீர: பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய: நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த: இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.


34. கக்குவான் இருமல் குணமாக: நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35. இரத்தம் உறைதல் குணமாக: நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. சொறி சிரங்கு குணமாக: கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.


37. சளி மூக்கடைப்பு தீர: கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38. தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39. இரத்த கொதிப்பு குணமாக: அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.


40. கண்வலி வராமல் தடுக்க: எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41. தொண்டை கரகரப்பு நீங்க: பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42. குடல்புண் குணமாக: மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.


43. கால்பித்த வெடிப்பு: அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44. இரத்தம் சுத்தமாக: தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

45. முடிவளர்வதற்கு: கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.


46. செருப்புக்கடி குணமாக: தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47. கருப்பு முடியாக மாற்ற: காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48. தொழுநோய் குணமாக: கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.


49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக: ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

50. சதை போடுவது குறைக்க: வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51. தூக்கம் வர: வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.


52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற: உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி: கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54. வாந்தியை நிறுத்த: துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.


55. பித்த வாந்தியை நிறுத்த: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க: அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57. மந்தம் அஜீரணம் குணமாக: கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.


58. சிறு நீர் எரிச்சல் குணமாக: அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59. வாய் நாற்றம் போக: நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க: கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.


61. தோல் வளம் பெற: ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

62. வரட்டு இருமல் தனிய: எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

63. கருப்பை கோளாறு நீங்க: அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்.
 

Bright Face (tamil Articles)


ரு சிலருக்கு ஆயில் ஃபேக்டிரியே வைக்கிற அளவுக்கு எப்பவும் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும். அவர்கள் நேரம் கிடைக்கிறப்பவெல்லாம் 'ஃபேஸ் வாஷா'ல முகத்துல நுரை வர்ற அளவுக்கு தேய்ச்சுட்டு, பிறகு ஒரு டீஸ்பூன் சர்க்கரையை எடுத்து முகத்துல மெதுவா மசாஜ் பண்ணணும். இதனால வொயிட் ஹெட்ஸ், பிளாக் ஹெட்ஸ் எல்லாம் போறதோட முகத்துல இருக்குற துவாரங்கள்ல அடைச்சிருக்கிற அழுக்கும் வெளியேறிடும். முகமும் பார்க்கப் படு ஃப்ரெஷ் லுக் கொடுக்கும்.
இதே சிசிக்சையை கழுத்துக்கும் செய்யணும். அப்போதான் முகமும் கழுத்தும் ஒரே நிறத்துல இருக்கும்.குளிக்கிறதுக்கு எப்பவுமே மைல்டான பேபி சோப்தான் பயன்படுத்தணும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிற அன்னிக்கு மட்டும் உடம்புக்கு சோப் போடாம, கடலைமாவுல கஸ்தூரி மஞ்சள் கலந்து குளிக்கலாம்.தலைமுடியைப் பராமரிக்கிறதுக்கு சோம்பல்படவே கூடாது. மாசம் ஒரு தடவை ஹென்னா போடணும். ஹென்னா எப்படி தயாரிப்பது?முந்தின நாளே நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் எல்லாத்தையும் தண்­ர் சேர்த்துக் கலந்து இரும்பு கடாயில நல்லா ஊற வச்சிடணும். மறுநாள் இந்தக் கலவையோடு முட்டையோட வெள்ளைக் கரு, தயிர் கலந்து தலையில தேய்ச்சு ரெண்டு மணி நேரமாவது ஊற வெச்சுக் குளிக்கணும். தயிர் கலந்து ஹென்னா போடறதால, பொடுகு தொல்லை ஒழியறதோட, தனியா கண்டிஷனர் போட வேண்டிய அவசியமும் இருக்காது. ஹென்னா போடுற அன்னிக்கு மட்டும் முடிக்கு ஷாம்பூ போடாம, தண்ணியாலதான் அலசணும். அப்போதான் அதோட சாரம் தலையில தங்கும்.அழகுல உதட்டுக்கு முக்கிய பங்கு இருக்கு. தொடர்ந்து லிப்ஸ்டிக் உபயோகிச்சா உதடு கருத்துப் போயிடும்.
 எப்பவும் லிப் கிளிசரின் அல்லது லிப் கார்ட் தடவிட்டு, அதுக்கு மேலதான் லிப்ஸ்டிக் போடணும். இதனால, உதட்டோட இயல்பான நிறம் மாறாது.தினமும் தூங்கப், போறதுக்கு, முன்னாடி கை, கால்களை சுத்தமா கழுவிட்டு ஆலீவ் எண்ணெய் தடவணும். இப்படி ரெகுலரா செஞ்சா சருமம் பட்டுப்போல மிருதுவா மாறும்.'ரெகுலரா பார்லர் போய் ஐ-ப்ரோஸ் ட்ரிம் பண்ணிக்கலாம். ஹேர் கட்-டும் செய்துக்கலாம். 
இப்படி நம்மள நாமே அழகுபடுத்திக் கொண்டால் எப்பவுமே நாம அழகுதான். பள பள பப்பாளிப் பழமே! முகம் பள பளக்க பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரின் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பாக் மாதிரி போட்டு பதினைந்து நிமிஷம் ஊறிப் பிறகுக் கழுவிப் பாருங்க.. முகம் தங்கம்போல ஜொலிக்கும்! உடம்பு தோல் பள பளக்கவும் பப்பாளிப்பழம் நல்லது. ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சக்கரை (தேவையானால்) சேர்த்து காலை ப்ரேக், பாஸ்ட்டாக சாப்பிட்டுப் பாருங்க... 
முப்பதே நாளில் தோலில் மாற்றம் தெரியும். மலச்சிக்கல் தீரும், புத்துணர்ச்சி தரும் ரத்தம் சுத்தியாகும். பப்பாளிக் காயின் பால் பாத பித்த வெடிப்புக்கு நல்லது.உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம்.பழங்களினால் சாலட் செய்யும் போதும், ஜாம் செய்யும் போதும் பப்பாளிப் பழத்தை நிறைய சேர்க்கலாம்.இந்தப் பழம் போலவே அத்தி பழமும் உடல் அழகுக்கு உதவும். இதயம் வலுப்பெறும். இரத்த அழுத்தம் சீராக சாத்துகுடி ரசம், பித்தம் தணிய விளாம்பழம், ஜூரம் தணிய மலச்சிக்கல் நீங்க திராட்சைப்பழம் என்று நிறைய இருக்கிறது!

வர்கள் எதிர்பார்ப்பது என்ன?

-- பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய  ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்ட ன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...



ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.

ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.

84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.

வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.

ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... 



அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.


அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு.....






TamilGms தளத்திற்காக 

நெல்லையிலிருந்து
தமிழ் Gm.Sania



உடல் உறவின் போது உச்ச த்தை அடைய

(கணவன் மனைவிக்கு மட்டும்)

 பலருக்கு, செக்ஸ் செய்தால் நிச்சயம் விந்து நீக்கம் ஏற்படும் என்ற தவறான ஒரு கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.

முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளியாக முடியும்.
- ஒரு பெண்ணை முத்தமிடும் போதும் விந்து வெளியாக முடியும்.

- ஒரு பெண்ணை தடவும் போதும் விந்து வெளியாக முடியும்.

-ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தவுடன் விந்து வெளியாக முடியும்.

- ஓரு பெண்ணின் மார்பகத்தை சுவைக்கும் போதும் விந்து வெளியாக முடியும்.

- அவள் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை லேசாக வைத்தவுடன் விந்து வெளியாக முடியும்.

- அவள் உறுப்பில் ஆண் உறுப்பை இயக்கும் நேரத்திலும் விந்து வெளியாக முடியும்.

- அவள் உறுப்பில் ஆணுறுப்பை இயக்காமல் சும்மா வைத்திருந்தாலே விந்து வெளியாக முடியும்.

ஒவ்வொன்றாக, இப்படி புட்டு-புட்டு வைப்பதற்கு காரணம், ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது எந்த கட்டத்தில் விந்து வெளியாக வாய்ப்பு உண்டு என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இல்லாவிட்டால், விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற கதைதான்.

பெண்ணின் காலணிகளைப் பார்த்தவுடன் விந்து வெளியான் ஆண்களும் உண்டு என்று செக்ஸ் புத்தகங்களில் படித்ததுண்டு.

இவ்வாறு எந்த நேரத்திலும் ஒரு ஆண் விந்து நீக்கம் செய்ய முடியும் என்பதால், ஆணின் இன்ப நேரம் ஒரு சில வினாடிகளில் முடிந்து விட வாய்ப்பு பிரகாசமாக உண்டு.

இந்த நுணுக்கம் புரிந்தவர்கள் மணிக்கணக்கில் விந்து நீக்கம் செய்யாமல் ஒரு பெண்ணிடம் செக்ஸ் செய்ய முடியும். அது சாத்தியமே!
தேவை 2 விசயங்கள்.

1 ஆணுறுப்பின் கூடுதல் விறைப்புத் தன்மை

2. உடலில் போதிய சக்தி

இன்றைய பணி சூழலில், பலருக்கு ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. அது இயல்பானதே!

அதிக டென்ஷன், அலைச்சல்,கவலை, செக்ஸ்-இல் பயம், உடற்பயிற்சி இன்மை போன்றவை ஆண் உறுப்பின் விரைப்புத்தன்மை குறைய காரணமாகின்றன.

விறைப்புத் தன்மை கூடனுமா?

காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடுங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக்கரணம் போடுங்கள். தொடக்கத்தில் 10போதும். ஒரு வாரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப் பார்ப்பீர்கள்.

தேவைப்பட்டால், 10- கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில் ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.
அதோடு, சுலபமான யோகாசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தாலும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இருப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடையில் உள்ளது.

மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்.

இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்திவிடும்.

தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை.

அது மட்டுமல்லாமல் , நன்றாக சாப்பிடுங்கள். உடலில் சக்தியை சேமித்து வையுங்கள்.

இவை போதும். நீண்ட நேரம் செக்ஸ்செய்ய..

ஆண் சீக்கிரமே இன்ப நிலை அடைந்து உச்சத்தை எட்டி விடுவான் என்று அறிவோம்.

பெண் எப்படி?

பெண் மெதுவாகத்தான் செக்ஸ்-இன் உச்சத்தை அடைவாள். அதனால், அவள் உச்சத்தை அடையும்வரை ஆண் தாக்குப்பிடிக்க வேண்டுமே!



செக்ஸ்-இன்
இன்ப நிலை











நேரம்

=> நேர்க்கோடு ஆணையும் வளைந்த கோடு பெண்ணையும் குறிக்கிறது



மேற்படி பார்த்தால், ஆண் சில நிமிடங்களில் இன்ப உச்சத்தை அடைந்து விந்து நீக்கம் ஏற்பட்டுவிடும் ஆனால், பெண், நீண்ட நேரத்திற்கு பிறகே இன்ப உச்சத்தை அடைகிறாள்.

அதனால் ஆண்கள், ஆண் உறுப்பின் விறைப்பு தன்மையை பெருக்கி நீண்ட நேரம் செக்ஸ்-இல் இருந்தால், உங்கள் துணை பரிபூரண உச்ச நிலையை அடைவாள். 

அதன்பிறகு
, நீங்கள் விருப்பட்டால், விந்து நீக்கம் செய்யலாம். இல்லாவிடின் விந்து நீக்கம் செய்ய வேண்டாம். மறுபடியும், சிறிது ஓய்வுக்குப்பின் நீங்கள் செக்ஸ்-கு தயாராகாகி விடுவீர்கள். மறுபடியும் ஒரு ரவுண்டு போகலாமே!

ஆண்களிடம் உள்ள தவறான பழக்கம். ஆண் உறுப்பை நுழைத்தவுடன் ஓயாமல் இயங்குவது. இவ்வாறு செய்தால் விந்து உடனே வெளியாகிவிடும்.

முதலில் மெதுவாக இயங்க வேண்டும். பிறகு சற்று வேகமாக. விந்து வெளிவரும் போல் தெரிந்தால், இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும் ஆனால், ஆண் உறுப்பை வெளியில் எடுக்காமல் இருந்தால் நல்லது.

ஒரு வேலை, விந்தை கட்டுப்படுத்த இயலாது என்று உணர்ந்தால் உறுப்பை வெளியே எடுத்து விடவும். சில வினாடிகள் ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் சும்மா இருக்காதீர்கள். அவளின் மார்பகத்தையும் உதட்டையும் ருசிக்கவும். தேவைப்பட்டால் கடிக்கவும்.

பிறகு, மறுபடியும் ஆண் உறுப்பை பயன்படுத்தவும். இப்படியாக, செக்ஸ் இன்பத்தை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியும்.

ஒரு விஷயம் தெளிவாக ஆண்களுக்கு விளங்க வேண்டும்.

செக்ஸ் இன்பத்தை 2 விதமாக அனுபவிக்கலாம்.
ஒன்று, எடுத்த வேகத்தில் காரியத்தை முடித்து ஓய்ந்தல். இது சில நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும். மிக அதிகமான இன்பம் அனுபவித்தது போல் தோன்றும். ஆனால், அப்படியில்லை. நீங்கள் உங்கள் மனத்தில் தேங்கியிருந்த வெறித்தனத்தை வெளியாக்கி விட்டீர்கள். அவ்வளவுதான்.


மற்றொன்று, இழுத்தடிப்பது. நேரத்தைக் கடத்துவது. சுமார் அரை மணி நேரம், ஆண் உறுப்பு விறைப்பாக இருந்து செக்ஸ் செய்தால், ஒரு புதுமையான் 'கணம்' உங்கள் உறுப்பில் தெரியும்.

இதே ஒரு மணி நேரமாக இருந்தால், அந்த 'கணம்' அதிகரிக்கும். அந்த 'கணம்' என்பது அன்ன?

அது மின்சக்தி என்று பிறகு தெரிந்து கொண்டென். அந்த மின்சக்திதான் நம் இன்பத்தின் அளவை பெருக்குகிறது. அந்த மின் சக்தியை பெண்ணும் உணருவாள். இவ்வாறு மிக மெதுவாக, அவள் உச்சத்தை அடையும் நேரத்தில், ஒரு கட்டத்தில் இருவருமே மிக உச்சத்தில் இருப்பார்கள்.

முடிந்தால், அப்பொழுதும் விந்து நீக்கம் செய்யாதீர்கள். நீங்கள் மிதப்பீர்கள்.

என்ன அருமையான அனுபவம்!

ஆண்களே! பெண்களே! அனுபவிங்கள்.

மொத்த வாழ்க்கையில், சில தடவையேனும் இவ்வாறு அனுபவியுங்கள்.

செக்ஸ்-இல் இருந்து புரிந்துணர்வு கிட்டும். அப்புரிந்துணர்வு உங்களை விடுவிக்கும்.

பிறகு, ஆன்மீக வாழ்க்கையில் நுழையுங்கள்.

செக்ஸ் உங்களை தொல்லைப் பண்ணாது.

நீங்கள் அமல்படுத்தும், பூசை, சடங்கு, சாங்கியங்கள் அனைத்தும் உங்களை மறைமுகமாக, செக்ஸ் தொல்லையிலிருந்து விடுவிக்கவே!

ஆனால், அவை உங்களை முழுமையாக விடுவிக்க இயல வில்லை. ஏனென்றால், நீங்கள் மூக்கை பின்னால் இருந்து தொட முயற்சிக்கிறீர்கள். அது சிரமம்.

அதனால், நேரடியாக, மூக்கை தொட்டுவிடுங்கள். விட்டது 

மேற்கொண்டு தியான வாழ்வில் தொல்லை இல்லாமல் செல்லலாம்.





இந்த கருத்து என்னுடையது அல்ல.. நமது சக பதிவாளர் 'shimarao' அவர்களின் கருத்து அவருடைய கருத்து பலருக்கு பயனளிக்கும் என்பதால் நமது தளத்திலும் அதனை சார்ந்து சிறு மாற்றங்களொடு பதிவு செய்துள்ளோம்

Thanks To: http://shimarao.blogspot.com

டிரையல் ரூம்களில் கவனம் தேவை 

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கையை புரட்டினால் அதில் குறைந்த பட்சம் இரெண்டு செய்திகளாவது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியதாக இருக்கும். நாம் சுதந்திரமடைந்து அரைநூற்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் நாம் நம்முடன் வாழும் பெண்டிற்கு அந்த சுதந்திரத்தை அளிக்கவில்லை என்பதே இது காட்டுகிறது.

இன்றுள்ள சூழ்நிலையில் துணிக்கடைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்குரிய ஆடைகளை வாங்கும்போது அதை அணிந்து பார்பதற்க்காக ட்ரையல் ரூமை பயன்படுத்துவது தவிர்க்க இயலாதது. அங்கு சில மனித உருவி;ல் பிறந்த பிராணிகள் செய்யும் செயல்கள் மன்னிக்க இயலாதது அதாவது ஆடை மாற்றும் அறையில் இருபுறமும் இருந்து பார்க்கும் கண்ணாடி, அறையின் ஏதாவதொரு மூளையில் மறைவாக பதிக்க பட்டிருக்கும் கேமராக்கள் போன்றவை அவற்றில் சில. மனிதனின் தவறுகளுக்குரிய விளைவுகளை அவனையே அவனின் வாழ்நாட்களில் இறைவன் சந்திக்க செய்துவிடுகிறான் என்றாலும் நம் அறியாமையும் அந்த தவறுகளுக்கு ஊக்கமளித்துவிடுகின்றன என்பதை மறுக்க இயலாது, நாம் உசாராக இருந்தால் இவற்றிலிருந்து சுலபமாக தப்பி விடலாம் என்பதும் மறுப்பதிற்கில்லை. இந்த கயவாளிதனத்தை சுலபமாக கண்டறிந்து அவற்றிலிருந்து தப்புவது எப்படி என்று கீழே காண்போம்.

உடை மாற்றும் அறையில் பதிக்க பட்டிருக்கும் கண்ணாடியை நீங்கள் நுனி விரலால் ( மேலே உள்ள படத்தில் போல்) தொடுகையில், கண்ணாடியில் உள்ள உங்கள் விரல் பிம்பத்திற்க்கும், உங்கள் விரலுக்கும் இடையில் சிறிது (1Cm அளவிற்கு) இடைவெளி இருந்தால் அது நார்மலான கண்ணாடி.

உங்கள் விரல் பிம்பத்திற்க்கும் உங்கள் விரலுக்கும் இடையில் இடைவெளி கொஞ்சம் கூட இல்லையெனில் (கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல்) உசாராகவும் அது இருபுறவழி கண்ணாடி.

உடை மாற்றும் அறையில் மறைவாக பதிக்கபட்டிருக்கும் சிறிய அளவிலான கேமராக்களை கண்டறிவது எப்படி என்றால் அதுவும் சுலபமானதே. உள்ளே சென்று கதவை அடைத்தவுடன் உங்கள் மொபைல்போனை உயிர்பியுங்கள் உங்கள் நண்பரை அழையுங்கள். அழைப்பு நீங்கள் அறையினுள் இருக்கும்போது கிடைக்கவில்லையென்றால், கதவை திறந்து வெளியில் வாருங்கள் இப்போது அழையுங்கள் அழைப்பு கிடைத்தால் உசராகவும் அறையினுள் நிச்சயம் கேமரா பதிக்கபட்டிருக்கும்.

இந்த அனுபவம் இதை வாசிக்கும் உங்களில் யாருக்காவது நேர்ந்தால் அமைதியாக அந்த கடையிலிருந்து வெளியேறிவிட வேண்டாம் அது உங்கள் உடன் பிறவா மற்ற சகோதரிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம். அந்த முதலாளி ஓநாய்களின் முகத்திரையை கிழிக்க அஞ்ச வேண்டாம். கோழையாய் அஞ்சி நெடுநாள் வாழ்வதை காட்டிலும் வீரனாய் ஒருநாள் வாழ்ந்தாலும் நன்றே. இந்த பதிவு பெண்களுக்காக மட்டும் அல்ல ஆண்களுக்கும் தான்.

நன்றி :http://sureshnamashivayam.blogspot.com/

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...