நீ...
திருவோணம் பெற்றெடுத்த வெகுமானம்
திரைகடல் தாண்டும் உன் பகுமானம்
நீ..
சூரியனுக்கும் தாமரைக்கும் பிறந்தவள்
சொர்க்கத்தின் மடியினிலே வளர்ந்தவள்
நீ...
கண்ணாடி பாத்திரமாய் இருப்பதானால்
கல்லெறிய துடிப்பார்கள்- - எச்சரிக்கை!
அக்ஷய பாத்திரமாய் நீயிருந்தால்
ஆண்டவனே கைகட்டி வந்து நிற்பான்
அறிவையும் தெளிவையும் துணை கொண்டு
அகிலத்தை வென்று விடு - என் ஆசி உண்டு
இது ஒரு குட்டி தேவதைக்காக
திரு. கண்ணன் அவர்களால் எழுதப்பட்டது.
திரு. கண்ணன் அவர்களால் எழுதப்பட்டது.