உலகில் எத்தனையோ அதிசயங்கள்... அற்புதங்கள்... இன்றும் புரியாத புதிராக எத்தளையா திகில் கலந்த அதியசங்கள். குறிப்பாக கூறப்போனால் நமது பத்திரிக்கை நிருபர் ஸ்ரீவைபிரியன் அவர்களின் பெர்முடா முக்கோணம் பற்றிய முந்தைய பதிவை கூட கூறலாம்.
ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா என மூன்று கண்டங்களும் கூடும் இடத்தில் உள்ள எகிப்திற்கும், பிரமீடுகளுக்கும் தான் இந்த பதிவு.
நைல்நதி, மம்மிகளின் பிரமீடுகள், உலக அழகி கிளியோபாட்ரா என எகிப்தின் புகழுக்கு புகழ்சேர்ந்தவை, சேர்த்தவர்கள் ஏராளாம்.
வறண்ட மேற்கு மற்றும் கிழக்குப் பாலைவனங்களில் இருக்கும் இதன் பெரும்பான்மையான நிலப்பகுதி, நாட்டின் முதன்மை அம்சமான நைல் ஆற்றால் பிரிக்கப்படுகிறது. சுமார்16 கி.மீ அகலத்திற்குத் தட்டையான சமதளப்பள்ளத்தாக்கை உருவாக்குகிறது. கெய்ரோவுக்கு வடக்கே மக்கள் தொகை அதிகமுள்ள தாழ்நிலை முகத்துவாரப் பகுதியில் இந்தப் பள்ளதாக்கு விரிகிறது.  ஏறத்தாழ நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அங்கு நாகரிகம் செழித்து வளர்ந்து, மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது என்பதற்கு ஆதராங்கள் கிடைத்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றாக நிமிர்ந்து நின்று, நம்மை அண்ணாந்தும் அதிசயப்படும் வகையிலும் பார்க்க வைத்துக் கொண்டு இருக்கும் பிரமிடுகளே இதற்கு அசைக்க முடியாத சாட்சிகள். எகிப்து நாட்டின் அடையாளச் சின்னம்போல, தலையில் இருந்து தோளின் இரண்டு புறமும் சரிந்து கொண்டு இருக்கும் கவச உடையுடன் கம்பீரமாக ஒரு உருவம் காட்டப்படுகிறது. அது - மாமன்னர் ரம்ஸேஸ்-2. என கூறுகின்றனர்.
பிரமீடுகளில் உள்ளவை மம்மீகள் எனப்படும் பூத உடல் கள் என்பது உங்களுக்கு தெரிந்த சேதிதான்.
சரி இந்த மம்மீயை பற்றிய எனக்கு(ம்) தெரிந்த விஷயங்களையும் இங்கு உங்கள் பார்வைக்கு தருகிறேன்.
எகிப்தீயர்கள் கடவுள் நம்பிக்கை மிக்கவர்கள்... மேலும் மரணத்திற்கு பின்னும் ஒரு வாழ்வு உண்டு! என்றும் நம்புகின்றனர். ஒருவர் மரணம் அடைந்த பின் அவர் வேறு உலகிற்கு(எனக்கு இது சரியாக சொல்லத் தெரியவில்லை) செல்வதாகவும். அப்போது அவர்கள் தங்கள் பூத உடலை பற்றிய கவலை வர கூடாது என்பதாலும் அந்த உடல் பதப்படுத்தபட்டு பத்திரப்படுத்தப் படுகிறது. இவ்வாறு அந்த நபரின் உடல் பாதுகாக்கப்படவில்லை எனில் அவர்கள் கவனம் உடலின் மீது வருவதாகவும் அவர்கள் வேறு உலகம் செல்லும் பாதை மாறி இங்கேயே சுற்றி வருவதாகவும் நம்புகின்றனர்.
உடல் பதப்படுத்தப்படுத்தும் செயல் அனைத்து மக்களுக்கும் பொருந்தாது.இதற்கு அதிக செலவு ஏற்படும்.   மன்னர் வம்சத்தினர் மற்றும் பெரும் செல்வந்தனர் ( நம்ம ஊரு அரசியல் கிராக்கிகள் போன்றவர்கள்) ஆகியோரால்தான் தங்கள் வம்சத்தினரின் உடலை பதப்படுத்தி மம்மீகளாக மாற்றி வேறு உலகம் செல்ல வைக்க முடியும்.
இனி  பூத உடல்களை மம்மீகளாக மாற்றும் முறையை பார்க்கலாம்.....
1. இறந்தவரின் உடல் கையகப்படுத்தப்பட்டு  நைல் நதியில்  கழுவப்பட்டுகிறது. ( பாவங்கள் கலையப்பட்டு புன்னியம் கிடைக்குமாம்)
பின்பு உடலில் உள்ள நுரையீரல், கல்லிரல், குடல் உள்பட  உறுப்புகளை நீக்குகின்றனர்.
இதயம் மட்டும் இதில் விதிவிளக்கு இதனை உடலில் இருந்து எடுக்க மாட்டார்கள். காரணம் இதயம்தான் அந்த உயிருக்கு அறிவையும் மற்றும் செயல்படும் முறையையும் காட்டுமாம் ( பாடி ஆன பிறகுமாடா செயல் படுது )
அடுத்ததாக முளையை எடுக்கின்றனர். இதனை மூக்கு துவாரத்தின் வாயிலாக சிறிய செம்பு கம்பியின் உதவியுடன்  குத்தி உடைத்து வெளியே எடுக்கின்றனர். (மூளை நம்ம ஊரு ஆஃப் ஆயில் மாதிரி தான் இருக்குன்னு எனக்கு தெரிந்த ஒரு டூபாக்கூர் டாக்டர் சொல்லிருக்காரு)
பின்னர் மீண்டும் நைல் நதியில் கழுவப்பட்டு  உடலில்  அதாவது வலதுபகுதியின் வழியாக கல் உப்புகளை வைக்கின்றனர்.
பின்னர் இருக்கமான வெள்ளை துணியால் கட்டப்பட்டு மரப்பெட்டியில் வைத்து மூடிப்படுகிறது.
( இப்போது நாம எதிர்பார்த்த சூப்பரான மம்மீ ரெடி)
எக்ஸ்ட்ரா ஒரு தகவல்:- மம்மீகளுடன்  நகைகள், மற்றும் பொருட்களும் வைத்ததான் பிரமீடுகளில் வைப்பார்களாம்.
ஆனால் இப்போதுள்ள பிரமீடுகளில் உள்ளவற்றில் உள்ள பொருட்கள் எல்லாம் முன்னரே திருடர்களால் கலவாடப்பட்டும், இப்போதுள்ள ஆராய்சியாளர்களால் (அரசு சார்பாக?) கையகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது!

என்னமோ இருக்கு
இன்றைய நவீன அறிவியலால்கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம்தான் பெர்முடா முக்கோணம். இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது. சில ஆய்வாளர்கள் இந்த முக்கோணப் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவையும் சேர்க்கிறார்கள்.
 அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான போர் படை விமானங்களுக்கு பயிற்சி தரும் விமானம் ஒன்று 1945-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு பயிற்சியில் பங்குகொண்டது. அதன் பிறகு, அட்லாண்டிக் கடலின்மீது பறந்து கொண்டிருந்தது. அது மர்மமான முறையில் திடீரென்று பெர்முடா பகுதியில் மறைந்துபோனது. இந்த நிகழ்வைப் பற்றி கடற்படை அதிகாரிகள் ஒரு அறிக்கை அளித்தார்கள். அந்த அறிக்கையில் உள்ள விவரம் வருமாறு:
அந்த விமானம் தன் கட்டுப்பாட்டை இழந்து காணாமல் போவதற்குச் சற்று முன்பு, விமானத்தின் திசை காட்டி இயற்கைக்கு மீறிய அளவுகளைக் காட்டியது. அனுபவம் வாய்ந்த விமானியின் மேற்பார்வையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு ஒரு புரியாத புதிராக உள்ளது.” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதே போல இன்னொரு நிகழ்ச்சியும்  உண்டு. ஒரு கப்பல் காணாமல் போய்விட்டதாகவும். அந்தக் கப்பலை மீட்க கடற்படை விமானம் ஒன்று 13 மீட்பு பணி குழுவினருடன் சென்றதாகவும் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து சுமார் 1 மணி நேர பயணத்திற்கு பிறகு எந்த அறிகுறியும் இன்றி மறைந்ததாகவும் கூறுகிறது.! இந்த சம்பவமும் பெர்முடா பகுதியில்தான் நடந்தது.
மேலும் சுமார் 280 டன் எடையுள்ள “மேரி செலஸ்டி’ என்னும் கப்பலும், 1864-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி அதே பெயர்கொண்ட இன்னொரு துடுப்புக் கப்பலும் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்துபோனதாக  மேலைநாட்டுச் செய்தித் தாள்களில் குறிப்பிடப் பட்டிருந்தது. இதே போல் பெர்முடா முக்கோணப் பகுதியில் பார்படோஸ்  என்ற தீவிலிருந்து “யுஎஸ்எஸ் சைக்ளோப்ஸ்’ என்ற ஒரு பயணிக்கப்பல். அது எந்தச் சுவடும் இல்லாமல் தனது 309 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
இதே பெர்முடா முக்கோண எல்லைக்கு உட்பட்ட பகுதிதான் போர்டோரிகோ. இங்குள்ள சான்ஜூ நகரின் வான் பகுதியிலிருந்து ஒரு விமானம் பறந்தது. இந்த விமானத்தின் பெயர் “டக்லஸ் பிசி-3.’ மியாமி நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று மறைந்துபோனது. அதில் 32 பேர் பயணம் செய்தார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இது நடந்தது 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி.
 இன்னும் ஒரு வியப்பான சம்பவம்  இதே பெர்முடா முக்கோணப் பகுதியில் நடந்தது.  ஒரு ஜப்பானியக் கப்பல் எந்தத் தடயமும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூழ்கிவிட்டது. அப்போது கப்பலிலிருந்து, "கத்திக் கூம்புபோல அபாயம் தெரிகிறது! உதவிக்கு வாருங்கள்”
devil triangle
எனஅபாய அறிவிப்பு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கத்திக் கூம்பு எனும் வார்த்தை எதைக் குறிக்கிறது என்று இன்றுவரை அறியப்படவில்லை.
மேற்கண்ட அனைத்து மர்மச் சம்பவங்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் நடந்திருந்தாலும், ஏன் இப்படி நடக்கின்றன? என்ற கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.
இந்த மர்மங்களுக்கு மாயச் சக்திகள்தான் காரணம் என்பதைப் பொய்யாக்கும் வகையில், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வு நூலகர் டேவிட் குசெ என்பவர், “தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்ட்ரி சால்வ்டு’ என்ற நூலை வெளியிட்டார். அவர், அந்த நூலில் பெர்முடா பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று எழுதினார். மேலும், சூறாவளித்தாக்குதல், கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகள், மிகப் பெரிய முரட்டு அலைகள், கடற்கொள்ளையர்களின் செயல்கள் ஆகியவையும் காரணங்கள் என்று உறுதியாகக் கூறினார். அதற்கான தகவல்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்னவென்று உறுதியாகக் கூறமுடியாத நிலையே  இன்று வரை நீடிக்கிறது.
 இது போன்ற சம்பவங்களினால்தான் நம்மை மீறிய சக்தி உள்ளது என்பதை ஒரு திகிலுடன் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

இது தமிழ் ரிஷி என்பவரின் கட்டுரையை தழுவியும் (நன்றி திரு.தமிழ் ரிஷி) 
பெர்முடா ட்ரையங்கிள் சம்பந்தமான புத்தகங்கள் வாயிலாகவும் சேகரிக்கப்பட்டது.

கசக்கும் காதல் கல்யாணம்

பெரும்பாலும் காதல் திருமணங்கள் செய்யும் தம்பதிகள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகின்றனர் ஏன்? இந்த சூழ்நிலை!
பூமியில் பிறந்த எல்லா ஜீவராசிகளுக்கும் காதல், காமம் உள்ளிட்ட ஆசை,பாசங்கள் உண்டு என்பது அறிவு பூர்வமான உண்மை (தாவரங்கள் உள்பட) பெரும்பாலும், விலங்கினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் தங்கள் உறவுகளை வெளிப்படையாகவே நடத்துகின்றன. இவற்றில் மனித இனம் மட்டும் உடல் உறவை மறைவாகவே வைத்துக் கொள்கிறார்கள்...  இதற்கு காரணம் பலவாக இருந்தாலும் முதல் மூல காரணம் அவனின் ஆறாவது அறிவு, இதுதான் மனிதனுக்கு, கோபம், பொறாமை, தாழ்ப்புனர்ச்சி, ஆசைகள் என எல்லாவற்றிகும் காரணம்.
மனிதனின் பரினாம வளர்ச்சியால் அவன் தன்னை மற்றவற்றிலிருந்து உயர்த்தி கொள்ள ஆசைபட்டான். அடைந்தும் விட்டான். பின்னர் தன் இனத்திலேயே தான் தான் பெரியவன் என்று எல்லாராலும் பாராட்டபடவேண்டும், அனைத்தும் தனக்கு அடிமையாக வேண்டும் எனவும் அசைபட்டான்.
இங்கிருந்துதான் பெண்ணடிமைத்தனம் முதற்கொண்டு  சாதியடிமைத்தனம் வரை ஆரம்பிக்கலானது.
இன்றைய மனிதனின் காதல் டூ கல்யாணம்
ஒரு பெண் ஒரு ஆண்மகளை பார்க்கும் போது இவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையின் காரணத்தாலே அவன் மீது காதல் கொள்கிறாள். அந்த காதல் அவனின் உள்ளத்தையும், உணர்வையும் முதலில் பார்ப்பதில்லை.
சில காலங்கள் சென்ற பிறகு எல்லாம் ஓகே. இனி கல்யாணம் செய்து கொண்டு ஒன்றாக பயணிப்போம் என்ற சூழ்நிலை வருகிறது...
இதுவரை( திருமணத்திற்கு முன்) காதலி காதலனை மினிமம் காலை 9 மணிக்கு மேல்தான் பார்க்க வாய்ப்பிருந்திருக்கும், இதே காரணம்தான் காதனனுக்கும் எனவே இவர்களுடைய பாசிட்டிவ் முகங்களையே பார்க்க வாய்ப்பிருந்திருக்கிறது. இவர்களுடைய நெகடிவ் முகமான  தூங்கி எழுந்தவுடன் இருக்கும் முக லட்சனத்தை இருவரும்  ஒருவொருக்கொருவர் பார்க்க வாய்ப்பில்லை.
திருமணத்திற்கு பின்  ஒன்றாக தூங்கி எழுந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் போது அய்யயய்ய இந்த முஞ்சியவா நாம காதலிச்சோம். என்ற எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது இருவருக்கும் உள்ள நெருக்கம்.
இரண்டாவதாக..... காதலியோ அல்லது காதலனோ தங்கள் துணையை பார்க்கும்போது வெளியே எவ்வளவு கோபம் இருந்தாலும் அவர்களை பார்த்து கோபத்தை வெளிகாட்டிக்கொள்வதில்லை.... மாறாக ஒரு ரொம்..மான்டிக் லுக்,குதான் விடுவாங்க.
ஆனால் கல்யானத்திற்கு பின் எங்கேயோ உள்ள கோபத்தையெல்லாம் தனது முன்னாள் கதலி அல்லது காதலனிடமோ ( இன்றைய மனைவி, கணவர்) தான் வெளிகாட்டப்படுகிறது.
அன்று வெறும், சந்தோசத்தையும், ஆறுதலையும் தந்த காதலன் இன்று கணவன் ஆன பின் அதற்கு நேர் மாறாக   இருக்கிறானே என்ற ஆதங்கம் பிறக்கிறது. இது அவர்களுக்கிடையே உள்ள விரிசலை மேலும் பலமடைய செய்கிறது.

இப்படி துணையின் பாசிட்டிவ் கேரக்டரில் பார்த்தவர்கள் நெகடிவ் அவர்களின் நெகடிவ் கேரக்டர்களை பார்க்கும்போது அவர்களின் பிரிவுக்கு மிகப்பெரிய காரணமாக அமைகிறது.

சோ... உங்க லவ்ஸின் மூஞ்சிய காலைல போய் கண்டிப்பாக பாருங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்...
யாருக்கு?
யாருக்கோ.......?



தமிழ் ஜி.எம்.எஸ். தளத்திற்காக
தென் தமிழகத்திலிருந்து
செய்தியாளன்
ஸ்ரீவைபிரியன்
சானியா
ஆந்திரத்தில் உருவாகி பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ள டென்னிஸ்! புயல்
இவரை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை
2000ம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டில் இணைந்தார்
சானியாவின் வருகைக்கு பின்தான் டென்னிஸ் இந்தியாவில் குறிப்பாக இளைஞர் மற்றும் இளம் பெண்களிடையே அதிகம் பிரபலம் அடைந்தது என்றால் அது யாராலும் மறுக்க இயலாது. முடியாது.
ஊடகங்களின் தாக்கம்
தலைவியின் விளையாட்டு என்னவோ சுமார்தான்
ஆனால் ஆடியன்சை கவர் செய்வதில் இவர் செய்யும் மேனரீசம் சும்மா பிச்சு உதரும்

linkwith in

Related Posts Plugin for WordPress, Blogger...