ஆண் பெண் நேசம் புனிதமானதுங்க. ஆனா ஒரு சிலராலும், தவறான கண்ணோட்டத்தாலும் இந்த நட்பை தவறாக சுட்டிகாட்டபடுகிறது.
எந்த ஒரு பையனும் ( என்னைபோல நல்ல பையன்) பெண்களோடு பழகுவதும் அவர்களை நெருங்கி வருவதும் வெறும் காதலுக்காக இல்லீங்க....
ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறாங்க.( ஒரு வகையில் நல்லதுதான் சில விஷமிகளின் பிடியிலிருந்து தப்பி விடலாம்) ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும் புவது மோகத்தால் அல்ல. அது ஆபாச விஷயத்திற்கான அழைப்பும் அல்ல. உண்மையில் பெரும்பாலான ஆண்கள் பெண்களிடம் நல்ல நட்பு கொள்ளவே விரும்புகிறார்கள். பிரச்சினைக்குரிய பெண்களின் பிடியில் இருந்து விலகியிருக்கவும் விரும்புகிறார்கள்!
ஆண்களுக்கு ஆண் நன்பர்கள் தான் இருக்கிறார்களே! பின் எதற்கு பெண் நன்பர்கள் உங்களுக்கு என கேட்கலாம். உண்மை என்னவென்றால் ஆண்கள் தங்கள் சந்தோசத்தை மற்றொறு ஆணிடம் கூறிவிடுவார்கள். ஆனால் தனது துக்கம், கவலை, தோல்வி போன்ற மைனஸ் விஷயங்களை ஆண் நன்பர்களிடம் கூற விரும்புவதில்லை! காரணம் ஆணுக்கு ஆண் ஒரு போட்டியுண்டு (கேளி செய்வார்கள்) ஆனால் பெண் நன்பர்களிடம் அந்த போட்டியுணர்வு இல்லை... தனது ஆண் நன்பனை தட்டிக் கொடுத்து அவனை முன்னேற தூண்டுவாள் (எனக்கும் ஒரு நல்ல தோழி இருந்தாள்).
ஒரு சில பெண்கள் தான் அழகாக இருப்பதால்தான் தன்னிடம் ஆண்கள் நெருங்கிவருவதாகவும், தன்னை சுற்றுவதாகவும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல நல்ல நட்புக்காக வருபவன், அழகை பார்ப்பதில்லை, அன்பை மட்டுமே பார்க்கிறான். அவர்கள் நினைப்பது போலவும் இருக்கிறார்கள் அவர்கள்தான் அழகை பார்த்து சுற்றுவார்கள் ஆனால் நட்பிற்காக அல்ல......
உங்கள் நண்பர் உங்களை விரும்புவதாக கூறும் பட்சத்தில் அவர்களுக்கு உங்கள் நிலையை உடனடியாக தெரிவித்துக் கொள்ளுங்கள்.. மேலும் உங்களை சுற்றிவரும் ஒரு நன்பன் வாழ்க்கை துணையாக வருவது மிகவும் நல்லது மட்டுமல்ல பாக்கியமும் கூட..
ஏனென்றால் உங்கள் நட்பையும் உங்களையும் பிரிய மனமில்லாமல்தான் வாழ்க்கை முழுவதும் நீங்க வேனும்னுதான் தன் அன்பை காதலாக உங்களிடம் சொல்லிருப்பாரு.
என்றும் அன்போடு....
தமிழ்... கணேஷ்