காதலிப்பது எப்படி ?

ஆனால் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் காதல் மலரும்." நீங்கள் விரும்புகிற பெண்ணை உங்களுக்கு மணம் செய்து கொடுக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுக்கலாம். அந்நிலையில் அவளிடம் மன்றாடி காந்தர்வமணதுக்கு அவளுடைய ஒப்புதலை பெறலாம். அவள் வயதில் மிகவும் இளையவளாய் இருந்தால் மலர்களையும். விளையாட்டுக் கருவிகளையும் பரிசாய் வழங்கலாம். நாட்டுப்புறத்தில் பிரசித்தமான விளையாட்டுக்களை அவளுடன் விளையாடலாம். ( கண்ணமூச்சி. ஓட்டம் இப்படி)
அவள் எதையெல்லாம் கண்டு வியக்கிறாளோ. வியந்து பாராட்டுகிறாளோ அதையெல்லாம் அவளுக்கு வாங்கி கொடுங்கள். மரம்.கொம்பு. தந்தம் இவற்றில் செய்த பொம்மைகளை அவளுக்கு தந்து மகிழ்ச்சியுட்டலாம். கிளிகள் . மைனாக்கள் அடைத்த கூண்டுகளையும். சங்கு. சோழி வகைகளையும் கொடுக்கலாம்.
நறுமணப் பொருள்கள் அடங்கிய குப்பிகள். வெள்ளி கிண்ணங்கள் கொண்ட வண்ணப் பேழையைக் கொடுக்கலாம். அவள் கேட்டதை எல்லாம் வாங்கி தருவீர்கள் என்ற எண்ணத்தை அவளுக்குள் ஏற்ப்படுத்துங்கள். ஆமாம். ஏன் அவள் கேட்டால் உன் பெற்றோரிடம் உள்ள பயத்தால்தான் என்றோ உன் தோழிகள் பொறாமைப் படுவார்கள் என்றே சொல்லுங்கள். சந்திப்போமா...?உன்னிடம் முக்கியமான விசயம் பேச வேண்டி இருக்கிறது என்று கூறி அவளை இரகசிய சந்திப்புக்குத் தயார் செய்யுங்கள். தங்கள் கணவரை தாங்களாகவே வரித்துக் கொண்ட சகுந்தலை. தமயந்தி போன்றவர்களின் கதையை பேசுங்கள். அவளுடைய பணிப்பெண் அல்லது செவிலித்தாயின் மகளைப் புகழ்ந்தும்.
பரிசளித்தும் வசப்படுத்துங்கள். அந்தப் பெண் உங்களுக்கு உதவிகரமாயிருப்பாள். பெண்ணுக்கு ஏதாவது ஒரு கலையில் ஈடுபாடு இருக்கும். உதரணமாக. இசையை விரும்பும் பெண்ணின் மனதில் இடம்பிடிக்க இனிமையாய் பாடுங்கள். உங்கள் இருவருடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்ப்பட்டு விடாதபடி கவனமாய் நடந்து கொள்ளுங்கள். மற்ற இளைஞர்களைவிட இவர் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். நல்லவிதமாய் பழகக் கூடியவர். நற்பண்புகள் நிரம்பியவர் என்று அவளுடைய தோழி மூலம் அவளாகச் சொல்கிற மாதிரி காதல் பெண்ணின் காதுக்கு எட்டச் செய்யுங்கள். ஒரு நல்ல காதலனாக மட்டுமன்றி நல்ல கணவனாகவும் நடந்து கொள்வீர்கள் என்பதை அவளுக்கு பரிய வையுங்கள்.
இருவரும் கண்டு மகிழ்கிற மாதிரி சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவளைச் சந்திக்கச் செல்லுமுன் தூய உடைகளை அணியுங்கள்.உங்கள் முன்னிலையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே உங்களுடைய ஆடை அணிகள் அவளைக் கவர்ந்திருக்கின்றனவா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்...!
உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக்கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற்றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள். நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன்முறுவலுடன் தலை குனிவாள்.
பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள். அவள் தொலைவில் உங்களை கண்டதும் தனது தோழிகளிடம் அவர் என்னைப் பார்தர்னா சொல்றீங்.. என்று கேட்டு உங்கள் கவனத்தை ஈர்ப்பாள். உங்களை போகவிட்டு சிரிப்பாள். உங்கள் முன்னிலையில் யாருடைய குழந்தையையும் எடுத்துக் கொஞ்சுவாள் முத்தமிடுவாள்.
அவளுடைய உடம்பினை ஒவ்வோர் அங்கமும் உங்கள் மீது அவள் கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்தும். ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வருவாள். தன்னை விசேசமாய் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். அவளுடைய கைக்குட்டை சூடிய மலர். மோதிரம் போன்ற சின்னச் சின்னப் பொருள்களில் ஒன்றை உங்களுக்கு தரும்படி விரும்பிக் கேளுங்கள். முதலில் சற்று தயங்கினாலும் பிறகு மறுக்க மாட்டாள். அவளுக்கு நீங்கள் வாங்கித் தந்த ஆடை. அணிகளை எப்போதும் பிரியமாய் அணிந்து கொள்வாள்.
ஒரு பெண்ணின் காதலை உறுதி செய்து கொள்ள இப்படி அநேக வழிகள். எப்படி வெல்கிறது...? உங்களிடம் மிகுந்த நேசம் கொண்ட பெண் எதற்க்கும் தயராகிவீடுவாள். உங்களுடன் துயிலவும். உங்களை இரகசியமாய் மணந்து கொள்ளவும். அவளுடன் நீங்கள் சதுரங்கம் ஆடும்போது தவறுதலாய் ஒரு காயை அவள் நகர்த்திவிட்டால் இது தப்பு என்று அவள் கையை பற்றுங்கள். பார்ப்பதற்க்க தவறை தடுக்கின்ற மாதிரி தெரிய வேண்டும். அதையே சாக்காய் வைத்து நெடுநேரம் அவள் கையை விட மாட்டீர்கள்.
அவளும் அதை விடுவித்து கொள்ளவதற்க்கு முயல மாட்டாள். உங்களுக்களுக்குள் ஒரு புதிய நெருக்கம் ஏற்ப்பட்டிருப்பதை இருவருமே அப்போது உணர்வீர்கள்.
Nellai _ TamiZh